සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව

Heavenly Entrance Church Of God

பரலோக வாசல் தேவ சபை



இந்த பத்திரிகையை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை அறிவிக்க மறக்க வேண்டாம் காரணம் நாம் திறம்பட செயப்பட வழி காட்டும்

இது பரலோக வாசல் தேவ சபை பத்திரிகையாகும் இப் பத்திரிகைக்காக ஜெபியுங்கள்

ස්වාදීන සඟරාව

Powered By Blogger

සවර්ග දොරටුවේ දේවසභාව

Unabhängige Zeitschrift Independent NewspaperHuman Rights - Menschenrecht - மனித உரிமை-Social Services සමාජ සේවා-


සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව


Heavenly Entrance Church Of God


பரலோக வாசல் தேவ சபை

இஸ்தாபகர் & தலைமைப் போதகர்

டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

செயலாளர் பொண் .சுரேன்

கணக்காளர் கிறசன் பயஸ்

தொடவாளர் சேத் ரவி


காணிக்கை தசமபாகம்

- Unabhängige Zeitschrift Independent Newspaper 2000 - 2014


எவரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயம் அல்ல மாறாக உண்மையை உண்மையாய் எழுதுகின்றோம் எம்மிடம் ஒளிவு மறைவு எதுவும் இல்லை
David Jayanadan Appukutti




காணிக்கை தசமபாகம்

(சிறந்தவை)

பிரியமானவர்களே, நம்முடைய ஜீவியத்தில் எவ்வாறு சிறந்தவைகளை கொடுக்கிறோம்? நாம் தேவனை ஆராதிக்கும் போது, காணிக்கை தசமபாகம் கர்த்தருக்கென்று உற்சாகமாக கொடுக்கும் போது, ஏழை எளியவர்களுக்கு சந்தோஷமாக உதவும்போது, மாம்ச இச்சைகளுக்கு இடம் கொடுக்காது பரிசுத்தமாக ஜீவியத்தை பாதுகாத்துகொள்வதின் மூலம், அவருடைய ஊழியத்தை உண்மையாக செய்யும் போது, நம்மிடமுள்ள சிறந்ததை அவருக்கு கொடுக்கிறோம்.


நிர்வாகம்

பரலோக வாசல் தேவசபை


http://hecg-weltrekord.blogspot.ch/





காணிக்கை


நாம் உற்சாகமாக தேவனுக்கு காணிக்கை (Offering) செலுத்தவேண்டும். பைபிளில் ஒரு ஏழை விதவை 2 காசு போட்டதை இயேசு பெரிதாகச் சொன்னார் என்றால், அது எந்த அளவு தேவனின் இதயத்தை தொட்ட செயலாக இருக்கவேண்டும்! (இங்கே 2 காசு என்பது அவள் ஏழை என்று காட்டுகிறது; ஆனால் அவள் தான் வாழ்வதற்கு இருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்பதுதான் தேவனின் இதயத்தை தொட்ட செயல்). "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" என்று II கொரி 9:7ல் வாசிக்கிறோம். இது கட்டளையல்ல.

லூக்கா 6:38ல் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.


தசமபாகம்

லூக்கா

11 அதிகாரம்

42. பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம பாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.


மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. (மல் 3:8)


Luke 6:38

Give, and it shall be given unto you; good measure, pressed down, and shaken together, and running over, shall men give into your bosom. For with the same measure that ye mete withal it shall be measured to you again.


Luke 11:42

But woe unto you, Pharisees! for ye tithe mint and rue and all manner of herbs, and pass over judgment and the love of God: these ought ye to have done, and not to leave the other undone.


Malachi 3.8

Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.


---------------------------------------------------------------

http://hecg-weltrekord.blogspot.ch/




Freiwillige Spenden sind erwünscht. Dies ist eine freiwillige christliche Gemeinschaft. Das Bankkonto ist in Sri Lanka vorhanden und nicht in der Schweiz. Auch die Finanzbuchhaltung wird dort geführt.

Wer möchte kann gerne Spenden - sind sehr erwünscht!


Auf das Konto HECG:


விரும்பியவர்கள் மட்டும்தான் கட்டாயமாக அல்ல


இந்த வங்கி இலக்கம் எவருடைய தனிப்பட்டதும் அல்ல பரலோக வாசல் தேவ சபைக்குரியதே


அருமையானவர்களே !

நன்கொடை இன்று தொடக்கம் 26.12.2013 இருந்து தர விரும்புபவர்கள் எமது சபை வங்கி இலக்கத்துக்கு அனுப்பலாம்


எமக்கு சுவிஸ் அல்லது இலங்கையில் ஏன் எந்த வெளி நாட்டு பணமும் எமக்கு கிடைப்பதில்லை மாறாக எமது அங்கத்தவர்கள் இலங்கை ஏழை (விசுவாசிகள்) கொடுக்கும் ஒரு சில பணமே இலங்கை ஊழியர்கள் சிறு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது


ஆனாலும் நாம் வெளிநாடுகளில் உள்ள எமது அனைத்து மக்களையும்

வேண்டிகொள்வது யாதனில் முடியுமானால் முடிந்தவரை எமக்கு உதவுங்கள்


எமது இலக்கு :- வறிய ஏழை குழந்தைகள் / அனாதைகள் / திக்கற்றோர்

அடக்கு முறைக்குள் உள்ளக்கப்பட்டோர் மற்றும் எமது ஊழியத் தேவைகள்


நீங்கள் விரும்பினால் உதவி புரியுங்கள்

http://hecg-weltrekord.blogspot.ch/



Heavenly Entrance Church of God


( HECG )




பெயர் / Name

பரலோக வாசல் தேவசபை

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

வங்கி இலக்கம் :- 8224000940


Bank Name

வங்கியின் பெயர் :-Commercial Bank

Horana Branch

Swift Code : cceylklxxxx

SriLanka


நன்கொடைக்கான காரணம்

உதாரணம் :- சமூகசேவை / சபை ஊழியங்ககள் / சுவிசேசகம்

(எதாவது ஒன்றை தெரிவு செய்யலாம் )


Spendebereiche: christliche Sozialhile / christliche Gemeinde / Gospel (alles nur für Sri Lanka)


எவ்வளவு கொடுக்கலாம்

10 ரூபாய்க்கு மேல்


Was darf man spenden? Was Sie spenden ist Ihnen überlassen.


வெளிநாடுகளில் வாழ்வோர் விரும்பினால்

நீங்கள் வாழும் நாட்டு பண நாணயத்தை அனுப்பலாம்


Bitte vergessen Sie nicht Ihren Namen und die Adresse anzugeben für den Dankesbrief den Sie nach erfolgreicher Spende erhalten werden.


மறக்காமல் உங்கள் விலாசத்தை பணம் அனுப்பும்போது தெரிவித்தால் உங்களுக்கு எமது நன்றி கடிதம் அனுப்புவோம்


Diese Spenden sind nicht für private Nutzungen gedacht, sie sind wirklich für die freiwillige, gemeinnützige Arbeit. Herzlichen Dank auch im Voraus für Ihre Spende.



Gottes Segen.

நிர்வாகம் / Administration



பரலோக வாசல் தேவசபை

கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

நன்றி / Heavenly Entrance Christliche Gemeinschaft Sri Lanka




ආධාර


ප්‍රේමවන්ත සහෝදර ,සහෝදරයිණි ,
අපගේ දේවස්ථාන ගිණුමට යම් කෙනෙක් ආධාර කිරීමට කැමති නම් ,

එම මුදල් ගිණුමට බැර කරන්නේ කුමන හේතුවක් නිසාද යන්න සඳහන් කරන්න.උදාහරණයක් හැටියට නම් දේවස්ථානයේ වැඩි දියුණුවට ,

සුභාරංචිය දේශනා කිරීමට,නැත්නම් දුගී දරුවන්ගේ සුභසෙත පිණිස ,

වැඩිහිටි උපස්ථාන කිරීම වැනි දෑ සඳහන් කරන්න . එමෙන්ම ඔබගේ ලිපිනයන් ද සඳහන් කරන්න ස්තුති ලිපි ලිවිමට.


Heavenly Entrance Church of God

( HECG )SRILANKA

Name ;

Heavenly Entrance Church of God


Bank Account / Bankkonto

8224000940


Bank Name

Commercial Bank Horana Branch

Swift Code : cceylklxxxx


SriLanka



மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள இவர்களுடன் தொடர்வு கொள்ளவும்


சபைத்தலைவர் டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி

பரலோக வாசல் தேவ சபை SRIlANKA


பரலோக வாசல் தேவ சபை

கணக்காளர் சகோதரர் SRILANKA


G. பயஸ் டெலிபோன் 0094 77 47 96 418

SRILANKA

பரலோக வாசல் தேவ சபை

செயலாளர் : சகோதரர் P. சுரேன்

SRILANKA



http://hecg-weltrekord.blogspot.ch/

மனிதனை மனிதன் வெட்டுவதும் கொல்லுவதும் நாகரீகம் அற்ற செயல் ,
மதம் என்ற போர்வையில் அப்பாவி மக்கள் சித்திரவதை , கொலை , உடமைகள் கொள்ளை, மற்றும் நாசகாரியங்களை ஆண்டவன் பெயரில் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்

மனிதவ மற்றும் மனிதாபிமான அடிப்படையில் சரியானதோ அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதோ ஒன்றோ அல்ல
சகலரும் சமமானவர்கள்

மதம் , இனம் ,ஜாதி ,சமயம் , குலம் இவைகள் மனிதனால் உண்டாக்கப்பட்டது அனால் மனிதனோ இறைவனால் உண்டாக்கப்பட்டான்

அவனைக் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை ,

எல்லா மனிதருக்கும்
இரத்தம் சிவப்பு தானே !
இந்த
சிவப்பு இரத்தத்தை
மண்ணில் சிந்துவதும் ஏன் ?
ஏற்கனவே
சிவப்பாகி விட்டதே
ஜேசுக்கிறிஸ்துவின் இரத்தம்
இந்த பூமீயில்
2000 வருடங்களுக்கு முன்
நனைந்து விட்டதே
இனி நீங்கள் நனைக்க தேவை இல்லை

Rev.Appukutti Jayanadan David

සවර්ග රාජ්‍යයේ දොරටුව දේවසභාව
பரலோக வாசல் தேவ சபை

Translate / übersetzung / எந்தமொழி வேண்டும் என்பதை இங்கே தெரிவு செயுங்கள்

2014 වසර වෙනුවෙන් ස්වාමින්වූ ජේසුස් කිස්තුස් වහනේගෙන් පැමිණියාවූ අනාගත වාක්‍ය .


නුඹලාගේ සෞභාග්‍ය පිණිස මිස විපත්තිය පිණිස නොවන,නුඹලාගේ අනාගත බලාපොරොත්තු මුදුන් පමුණුවා දෙන මගේ යෝජනා මම හොඳින් දනිමි. මෙසේ පවසන්නේ ස්වාමින්වන මම ය .

ජෙරමියා 29:11




For I am conscious of my thoughts about you, says the Lord, thoughts of peace and not of evil, to give you hope at the end.

Jeremiah 29:11

2014 இவ் வருட வாக்குதத்த வசனம்

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.



பரலோக வாசல் தேவ சபை දමිල ක්‍රිස්තියානි වචන කියලා මෙහි ලිය තියෙනවා.මෙහි ලිය ඇති වචන ඉතාමත් යහපත් වචන.දමිල භාෂාවෙන් ලියතියෙන නිසා ඒගැන සැකයක් නොසිතන්න.මෙමෙ වචන කියවීමෙන් සිත පිරිසිඳු වෙනවා.මෙමෙ වචනම සිංහල භාෂාවෙන් ලිවීමට අපි උත්සහදරනවා.සිංහල ක්‍රිස්තියානි ලින්ක් එකක් තියෙනවා එයද බලන්න.බලා අන්අය සමගද බෙදාහදාගන්න.

Tuesday, 24 December 2013

புதிய போப்-பாண்டவர்



 HECG


'இந்த ஆண்டின் சிறந்த மனிதர் போப் பிரான்ஸிஸ்'-டைம் பத்திரிகை
போப் பிரான்ஸிஸ்
தனது இந்த ஆண்டின் சிறந்த மனிதராக, டைம் பத்திரிகை போப் பிரான்ஸிஸ் அவர்களைத் தேர்தெடுத்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருக்கும் போப் பிரான்ஸிஸ், மனசாட்சியின் புதிய குரலாக உருவெடுத்துள்ளார் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது.



தற்போது உலகத்தின் கவனம் புதிய போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்டிருக்கும் ஃபிரான்ஸிஸ்மீது குவிந்துள்ளது. முதல் முறையாக அர்ஜெண்டினா வில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இவரது பின்னணி என்ன? இவர் எப்படிப்பட்டவர்? இன்றைய சூழலில் இவர் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் என்னென்ன?
அறிமுகம்
போப் என்பவர் ரோம் நகரின் பிஷப். உலகம் முழு -வதி-லும் வாழும் சுமார் 100 கோடி கத்தோலிக்கப் பிரிவு கிருத்தவர்களின் மத குருவாகவும் இவர் மதிக்கப்-படு-கிறார். ரோம் நகருக்குள் அமைந்திருக்கும் வாட்டி-கன் என்னும் சிறிய சுதந்தர நாட்டின் அதிபரும் இவரே.
கத்தோலிக்கத் தேவாலயத்தில் போப்என்பவர் புனித பீட்டரின் வழித்தோன்றலாகப் போற்றப்படுபவர். போப்பாண்டவரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்துக்குப் பப்பாஸி என்று பெயர். கடந்த 2000 வருடங்களில் கத்தோ-லிக்க மதத்தை உலகெங்கும் பரப்பிய பெருமை இதற்கு உண்டு. ஆட்சியிலும் அரசியலிலும் போப்-பாண்டவர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் தற்போது மதப் பிரசாரம், கல்வி, சுகாதாரம், மனித உரிமை ஆகியவற்றில் மட்டுமே வாட்டிகன் கவனம் செலுத்தி வருகிறது.
போப் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
தொடக்கத்தில் பாதிரியார்களாலும், குரல் வாக்கெடுப்பு மூலமும் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் தற்போது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார்டினல்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் நடை-பெறும் கான்க்ளேவ் எனப்படும் கூட்டம் வாயிலாகப் பூட்டப்பட்ட அறைக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்திப் போப்-பாண்டவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்தல் முடியும்வரை வெளி உலகத்துடனான இவர்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். கூடியிருக்கும் கார்டினல்கள் தங்களுக்குள் ஒருவரை போப்பாண்ட-வராகப் பரிந்துரைத்து வாக்களிப்பர். மூன்றில் இரு பங்கு வாக்குகளைப் பெறும் கார்டினலே அதிகாரப்பூர்வ போப்பாண்டவராக அறிவிக்கப்படுவார். அதுவரை வாக்கெடுப்பு மீண்டும் மீண்டும் நடைபெறும்.
12-13 நாட்கள் தொடர்ந்தும் மூன்றில் இரு பங்கு ஆதரவுடன் புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை எனில் அதிக வாக்குகள் பெறுபவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்குச் சீட்டு எண்ணப்பட்டு முடிவு தெரிந்தவுடன் அவை தீயிட்டு எரிக்கப்படும். சிஸ்டைன் தேவாலய புகை-போக்கி வழியே தேர்வாகாத வாக்குச் சீட்டுகளுடன்
ரசாயனம் கலந்த கரும்புகை வெளியேறினால் புதிய போப்-பாண்டவர் இன்னும் தேர்வாகவில்லை என்றும், தேர்ந்தெடுத்த வாக்குச் சீட்டுகளுடன் ரசாயனம் கலந்த வெண்புகை வெளியேறினால் புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் பொருளாகும். 2005 தொடங்கி தேவாலயத்திலுள்ள மணிகளும் ஒலித்து புதிய போப்பாண்டவர் தேர்வை உறுதிப்படுத்தி வரு-கின்றன.
கார்டினல்களின் குழுத் தலைவரான டீன், போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டினலை இரு கேள்விகள் கேட்-பார். போப்பாண்டவராகத் தேர்வானதை ஏற்றுக் கொள்-கிறீர்களா?’ என்பது முதல் கேள்வி. அவர் சம்மதிக்கும் விதமாக அக்செப்டோஎன்று கூறினால் என்ன பெயரில் உங்களை அழைக்க விரும்புகிறீர்கள்?, என இரண்டாவது கேள்வியைக் கேட்பார். ஒருவேளை டீனே போப்பாண்டவராகத் தேர்வானால் மேற் கண்ட கேள்விகளைத் துணை டீன் கேட்-பார். இந்தச் சம்பிரதாயங்-களுக்குப் பிறகு மூத்த கார்டினல் புனித பீட்டர் சதுக்க தேவாலய மாடத்திலிருந்து புதிய போப் தேர்வான விவரத்தையும் அவரது புதிய பெயரையும் உலகுக்கு அறிவிப்பார். தேர்வானவர் போப்பாண்ட-வருக்-கான அதிகாரப்பூர்வ அங்கிகளுடன் (immantatio) குழுமியிருப்பவர்கள்
 முன் தோன்றி ஆசி வழங்குவார்.
புதிய போப்
2013 மார்ச் 13 அன்று 266வது போப்-பாண்ட-வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்ஸிஸ் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர். இயற்-பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோலியோ. 1936 டிசம்பர் 17 அன்று பியூனஸ் ஏர்ஸில் பிறந்தார். தந்தை மேரியோ ஜோஸ் பெர்-கோலியோ ஒரு ரயில்வே ஊழியர். தாய், ரெஜினா மேரியா சிவோரி. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள்.
இவருக்கு ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் ஜெர்மன் தெரியும். வாட்டிகன் வரலாற்றில் 1272 வருடங்களில் ஐரோப்பியர் அல்லாதவர் பதவியேற்பது இதுவே முதல் முறை. சொசைட்டி ஆஃப் ஜீசஸ் அமைப்பிலிருந்து ஒருவர் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதுவே முதல் முறை.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளைத் தொடர்ந்து பியூனஸ் ஏர்ஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். மதப்படிப்புகள் முடிந்ததும் 1969 டிசம்பர் 13 அன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டார். சொசைட்டி ஆஃப் ஜீஸஸில் படிப்படியாக உயர்ந்து 1973-79 வரை அதன் புரொவன்-ஷியல் சூப்பர்வைசராகப் பணியாற்றினார். 1980 முதல் 1986 வரை சான் மிகல் செமினரியின் ரெக்டராகப் பதவி வகித்தார். தொடர்ந்து ஜெஸ்யூட் சமூகத்தின் கன்ஃ-பெஸர் மற்றும் ஆன்மிக இயக்குனரானார்’. பல கட்ட வளர்ச்சி-களுக்குப் பிறகு 1998ல் பியூனஸ் ஏர்ஸின் ஆர்ச்பிஷப் ஆனார். 2001 பிப்ரவரி 21 அன்று அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் இவருக்கு சான் ரொபர்-டோ பெலார்மினோவின் கார்டினல் பாதிரியார்என்னும் பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தார்.
அரசியல், சமூகப் பார்வை
2004 இல் அர்ஜெண்டினா அதிபர் நெஸ்டர் கிர்ச்னர் மற்றும் அவருக்குப் பிறகு பதவியேற்ற அவரது மனைவி கிரிஸ்டினா ஃபெர்னாண்டஸ் கிர்ச்னர் ஆகியோருடன் ஃபிரான்சிஸுக்கு சுமுகமான நல்லுறவு இருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ஓர் அரசியல்வாதி-யாகவே இவரை அவர்கள் கருதினர். 2008ல் விவசாயிகள் பிரச்னைக்கு இவர் குரல் கொடுத்தபோது அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுபவராகவே இவரைப் பார்த்தனர். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் வசதியானவர்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுகிறது என்று ஃபிரான்சிஸ் குற்றம் சாட்டினார். நாட்டில் நிலவும் ஏழைமையைச் சுட்டிக்காட்டினார். பியூஸ் ஏரஸ் லஞ்சத்தின் தலைநகராக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.
பியூனஸ் ஏர்ஸில் குழந்தைகள்மீதான வன்முறை, குறிப்பாக பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாடு-வதை மறந்து, முரட்டு ஆண்களின் பாலியல் சபலத்துக்கு உள்ளாகித் தாங்களே உயிருள்ள பொம்மைகளாகச்சின்னாப்பின்னமாகிச் சீரழிகின்றனர். இயேசு ரத்தம் சிந்தியதற்கும், உயிர் துறந்ததற்கும் இங்கு அர்த்த-மில்லாமல் போய்விட்டது. மனிதர்களை விட இங்கு நாய்களுக்குத்-தான் அதிக மரியாதை!என்று 2007ல் கார்டினலாக இருந்த போது லத்தீன் அமெரிக்க ஆர்ச் பிஷப்களின் சார்பாக கூட்டறிக்கை வெளியிட்டு அப்போதைய போப் பெனிடிக்டிடம் சமர்ப்பித்தார்.
2010ல் அர்ஜெண்டினா அரசு ஒரே பாலினத் திருமணங்-களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்தபோது இயற்கைக்கு விரோதமான செயல் என்று வாதிட்டார். அதே போல் குழந்தை என்பது இறைவனின் பரிசு என்ப-தால் கருக்கலைப்பு மற்றும் கருத்தடைச் சாதனங்-களுக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இறக்கும் தறுவாயிலுள்ள 12 எய்ட்ஸ் நோயாளிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்டது மறக்கமுடியாதது. திருமணம் செய்துகொள்ளாத பெண்களின் குழந்தை-களுக்கு ஞானஸ்தானம் செய்ய மறுத்த பாதிரியார்களை அழைத்துக் கண்டித்ததுடன் அவற்றை ஆண்டவனின் குழந்தைகள்என்று அரவணைத்ததும் அவரது பெருமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃபாக்லாண்ட் தீவுகள் மீதான உரிமையை நிலைநாட்ட இங்கிலாந்துக்கும் அர்ஜெண்டினாவுக்கும் போர் நடைபெற்று அதில் இங்கிலாந்து ஜெயித்தது தெரிந்த விஷயம். ஆனால் 2012ல் ஃபாக்லாண்ட் தீவுகள் அர்ஜெண்டினாவுக்கே
சொந்தம்என்று ஃபிரான்சிஸ் சொன்னதாக செய்திகள் வெளியாயின. இது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் சமீபத்தில் விடுத்த ஓர் அறிக்கையில் போப் ஃபிரான்ஸிஸ் அப்போது கூறிய கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஃபாக்லாண்ட் தீவுகள் என்றென்றும் எங்களுக்கே சொந்தம். ஃபாக்லாண்ட் மக்களும் இங்கிலாந்-துடன் சேரவே விருப்பம் என்று கருத்துக் கணிப்பு மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்என்று குறிப்பிட்டுள்ளார்
சிறப்புகள்
அன்பு, மனிதநேயம், சமூக நீதி ஆகியவற்றை உயிர் மூச்-சாகக் கொண்டு ஏழைகளுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தார் என்று ஃபிரான்சிஸ் வருணிக்கப்படு-கிறார். இவருடைய எளிமையை பலரும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். இவரது எளிமை போப்பாண்டவராகத் தேர்வான பின்னரும் தொடர்கிறது. போப்பாண்டவராகத் தேர்-வானதும் வழக்கமாக எல்லா போப்களும் சிம்மாசனத்-தில் அமர்ந்து கொண்டுதான் ஏனைய கார்டினல்களின் வாழ்த்து-களைப் பெறுவது வழக்கமாம். ஆனால் இந்த நடைமுறையை உடைத்தெறிந்து நின்றுகொண்டே நானும் உங்களில் ஒருவன்என்று அடக்கமாக வாழ்த்து-களைப் பெற்றுக் கொண்டாராம் புதிய போப். தேவாலய மாடத்தில் நின்றுகொண்டு கூடியிருந்த கத்தோலிக்க மக்களுக்கு ஆசி வழங்கும்போது போப் அணியும் அதிகாரப்பூர்வ அங்கிகள் மற்றும் தங்கத்திலான சிலு-வையை அணியாமல் பியூனஸ் ஏர்ஸ் கார்டினலாக இருந்தபோது அணிந்த உடையிலேயே தோன்றியது பலரை ஆச்சரியப்பட வைத்தது. புனித ஃபிரான்ஸிஸ் என்பவர் ஏழைகளின் மீது அன்பு கொண்டவர் என்பதால் அவரது பெயரையே தான் வைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஃபிரான்ஸிஸ் என்ற பெயரை ஒரு போப் வைத்துக் கொள்வதும் இதுவே முதன் முறை.
குற்றச்சாட்டு
1976ல் நடைபெற்ற அர்ஜெண்டினாவின் மோசமான போர் எனப்படும் டர்டி வார்காலத்தில் 30,000க்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். ஆர்லாண்டோ யோரியோ மற்றும் ஃப்ரான்ஸ் ஜாலிக் ஆகிய இரு பாதிரியார்களைக் கடற்படை கடத்தியதைத் தொடர்ந்து சந்தேகப் பார்வை இவர்மீது படர்ந்தது. இவ்விருவரும் பின்னர் உயிருடன் திரும்பினாலும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, போதை மருந்துகளுக்கு அடிமை-களாக நிர்வாண கோலத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சொசைட்டி ஆஃப் ஜீசஸ் அமைப்பின் மேற்பார்வை-யாளராக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரு பாதிரியார்களின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தாரென 2005ல் மனித உரிமை வழக்கறிஞர் இவர்மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் ஆதாரமில்லை என்பதால் தீர்ப்பு தள்ளுபடியானது. தான் நிரபராதி என்றும், கடற்படை கடத்திச் சென்ற பாதிரியார்களை விடுவிக்கப் போராடியதே தான்தான் என்றும் பெர்கோலியோ விளக்கமளித்துள்ளார். தற்போது இவர் போப் ஃபிரான்சிஸ்ஸாகத் தேர்வான-தைத் தொடர்ந்து வாடிக்கனும் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான முகாந்திரமுமில்லை என்று அறிக்கை வெளியிட்டது.
சவால்கள்
கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 100 கோடி கத்தோலிக்கர்-களின் மதகுருவாகத் தேர்வாகியுள்ளவர் போப்பாண்-டவர் ஃபிரான்ஸிஸ். பழமைவாதியான இவர் இன்றைய நவநாகரிக சமூகத்தை எதிர்கொள்ள வேண்டி-யிருக்கும்.
வாடிக்கனின் நிதி விவகாரங்களில் ஒளிவுமறைவுகளும் பல்வேறு ஊழல்களும் நடப்பதாகச் சொல்லப்படு-கிறது.
அர்ஜெண்டினா, பிரேசில், சிலி, உருகுவே, மெக்ஸிகோ போன்ற உலகின் மிகப் பெரிய கத்தோலிக்க நாடுகளில் மத நம்பிக்கை குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புராடெஸ்டண்ட் மற்றும் பெந்தெ-கோஸ்ட் பிரிவுகளில் பலர் இணைவதாகவும், இன்னும் பலர் கத்தோலிக்க மதத்திலிருந்து விடுவித்துக் கொண்டு எந்த மதத்திலும் இல்லை (நன்ஸ்) என்று பதிவு செய்து கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆசிய மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கத்தோலிக்கம் பரவினாலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறையும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
கருக்கலைப்பு, கருத்தடைச் சாதனம் ஆகியவற்றைக் கத்தோலிக்கம் எதிர்ப்பதைப் பெண்களே விரும்பாததால் மத நம்பிக்கை குறைகிறது என்கிறார்கள். கத்தோலிக்கப் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதுடன் உடலுறவும் கூடாது என்னும் கண்டிப்பான உத்தரவு காரணமாகவே பலர் பாதிரியார்களாக வர விரும்ப-வில்லை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான போப்பாண்டவர்கள் இத்தாலியர்-கள். முதன் முறையாக 1522ல் நெதர்லாந்தின் ஆறாம் போப் ஆட்ரியன் தேர்வானார். நீண்ட காலம் கழித்து 1978ல் போலந்தின் இரண்டாம் போப் ஜான் பால், 2005 ல் ஜெர்மனியைச் சேர்ந்த பதினாறாம் போப் பெனெடிக்ட், தற்போது 2013ல் அர்ஜெண்டி-னா-வின் போப் பிரான்சிஸ் என இத்தாலியர் அல்லாதோரும் தேர்வாகி-யுள்ளனர்.
நீண்ட காலம் போப்பாண்டவர் பதவி வகித்தவர் ஒன்ப-தாம் பயஸ் (1846-1878 அதாவது 11,560 நாள்கள்). மிகக் குறைந்த காலம் பதவி வகித்தவர் எட்டாம் அர்பன் (1590 செப்டம்பர் 15 முதல் 27 வரை 13 நாள்கள்).
78 வயதில் போப் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவரது வாழ்வியல் முறைகளும் ஒரு முக்கியக் காரணம். இருப்-பினும் ஒருமுறை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய தருணம் அவரது வலது நுரை-யீரலின் மேற்பகுதி அகற்றப்பட்டது. இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் மூச்சு மண்டலத்தைத் தொற்று-நோய் பாதிக்கும் பட்சத்தில் இடர்களைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.


                                                                      

No comments:

Post a Comment